சேலம் மாவட்டத்தில் உள்ள கீரப்பாப்பம்பாடி மலையனூர் பகுதியில் ஸ்ரீரங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எலக்ட்ரீசியனான குமரவேல்(33) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஆண்டு குமரவேல் வீட்டின் மேல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட குமரவேல் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.

இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த குமரவேல் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குமரவேலின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.