சேலம் மாவட்டத்தில் உள்ள கருங்கல்பட்டி காய்கறி மார்க்கெட்டில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீஸ் ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை பார்த்ததும் ஒரு வாலிபர் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அந்த விசாரணையில் அவர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இளையரசு என்பது தெரியவந்தது. அவர் சட்ட விரோதமாக கஞ்சாவை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் இளையரசுவை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.