கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் விடிய விடிய இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் மலையோர பகுதிகளில் மழை பெய்வதால் திற்பரப்பு அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது அங்கு குளு, குளு சீசன் நிலவுவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவிக்கு சென்று ஆனந்தமாய் குளித்து மகிழ்கின்றனர். இதனையடுத்து சுற்றுலா பயணிகள் தடுப்பணியில் படகு சவாரி செய்து செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர்.