கோவை ஈச்சனாரி பகுதியில் பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில் தமிழக மக்கள் பிரதமர் மோடி அவர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பதாகவும் அவரது ஒன்பது ஆண்டுகால மக்கள் நல பணிகளை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்றும் கூறினார்.

அதோடு தமிழகத்தில் பாரதிய ஜனதாவிலிருந்து 25 எம்பிக்கள் மற்றும் கூட்டணி கட்சியிலிருந்து என மொத்த 39 எம்பிக்களை நாடாளுமன்றம் அனுப்புவோம் என்ற நோக்கத்துடன் பணியாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.