வனப் பாதுகாவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளுக்குரிய முதல் நிலை தேர்வுகளுக்கான தேர்வு தேதி மாற்றப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், உதவி வனப் பாதுகாவலர் (தொகுதி-1ஏ பணிகள்) மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்(தொகுதி-1சி பணிகள்) பதவிகளுக்குரிய முதல் நிலை தேர்வுகள் கணினி வழித்தேர்வாக நடத்தப்பட உள்ளது.

இதனால் ஏப்ரல் 9ம் தேதி காலை நடைபெற இருந்த மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான முதல்நிலை தேர்வு 29 மாவட்டங்களில் ஏப்ரல் 20ம் தேதி காலை நடைபெறும். இதேபோல் ஏப்ரல் 30ம் தேதி நடைபெற இருந்த உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கான முதல் நிலைத் தேர்வு 26 மாவட்டங்களில் மே 3ம் தேதி காலை 9:30 மணி முதல் பிறப்கல் 12.30 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2 தேர்வுகளுக்குமே முதல் நிலை தேர்வுக்கான தேதி மற்றும் தேர்வு மையங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை தேர்வாணையம் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.