கடந்த வாரம் வெளியிடப்பட்ட குரூப்-4 தேர்வு முடிவுகள் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி இருக்கிறது. தமிழ் தேர்வில் தோல்வி காரணமாக 5 லட்சம் பேருக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இன்று நடைபெறும் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

தேர்வு முறைகேடுகள் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) முனியநாதன் தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடக்கும் இந்த ஆலோசனையில் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். குரூப்-4 நில அளவர் தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில், இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. இது தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது.