அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக இபிஎஸ் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு பல கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தொண்டர்கள் வற்புறுத்தல் காரணமாகவே எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளராக உடனடியாக பதவியேற்றதாக கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

கட்சியில் இருந்துகொண்டு அனைத்து சுகத்தையும் அனுபவித்தவர்களுக்கு பெருந்தன்மை இல்லை. ஆனால் பல இக்கட்டான சூழலில் கட்சியை கட்டுக் கோப்பாக நடத்தியவர் இபிஎஸ். நாட்டு மக்களின் நலன் கருதி நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கப்படும் என்று கேபி முனுசாமி தெரிவித்தார்.