சென்னை பெருநகரில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே இ-டிக்கெட் முறை 2024-ல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒரே இ -டிக்கெட் முறை நடைமுறைக்கு வரும் என்றும் இத்திட்டத்திற்கு தனியாக செயலி உருவாக்கப்பட உள்ளதாகவும் CUMTA அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். புறப்படும் இடம், சேரும் இடத்தை பதிவுசெய்த பிறகு பயணிக்கவுள்ள போக்குவரத்து முறைகளை பதிவுசெய்யவேண்டும்.