சென்னை ஆவடியில் 25 வயதான ஜிம் பயிற்சியாளர் ஆகாஷ் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற கடுமையான பயிற்சி எடுத்துக்கொண்ட ஆகாஷ், அதிக அளவில் ஸ்டெராய்டு ஊசி எடுத்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக அவருக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்தது. இந்நிலையில் ஆகாஷ் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு ஜிம் பயிற்சியாளர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.