தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த மார்ச் 13ஆம் தேதி துறை தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து துறைகளுக்கான தேர்வு கடந்த மே மாதம் சென்னை மற்றும் டெல்லி உட்பட 39 தேர்வு மையங்களில் நடந்து முடிந்தது. இந்நிலையில் 122 கொள் குறி வகை தேர்வுக்கான தற்காலிக விடை குறிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இந்த துறை தேர்வுகளை எழுதிய தேர்வர்கள் இன்று முதல் ஜூன் இருபதாம் தேதி மாலை 5.45 மணி வரை ஒரு வார கால அவகாசத்திற்குள் உத்தேச விடைகள் மீதான தங்களின் ஆட்சேபனைகளை [email protected]என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் விவரங்களை பதிவிட்டு தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தேர்வர்கள் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் இந்த செயல்முறையை முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.