தமிழகத்தில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. நீண்ட நாட்களாக இந்த தேர்வுக்காக காத்திருந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சரிபார்த்தல் நாள் மார்ச் 4 ஆம் தேதி முதல் மார்ச் ஆறாம் தேதி வரை இரவு 11.59 மணி வரை உள்ளது. இந்த தேர்வு ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.