சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் இருந்த இடத்தில் லூலு மால் அமைப்பதற்கு நிலம் தர போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவுகின்றது. இது அடிப்படை ஆதாரமற்ற தகவல் என்று தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கோயம்பேடு பேருந்து நிலையம் இருந்த இடத்தில் லுலு மால் வரப்போகிறது என்பது உண்மை இல்லை. ஆதாரம் இல்லாத செய்திகளை ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். அரசுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்புவது குற்ற செயலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.