திருச்செந்தூர் கோவிலில் மத்திய மந்திரி எல்.முருகன் சிறப்பு யாகம் நடத்தினார்.

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் இருக்கும் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் நேற்று முன்தினம் இரவு வந்தார். கோவில் விருந்தினர் மாளிகையில் தங்கி சூரசம்கார மூர்த்தி சன்னதியில் பூஜை நடத்தி சிறப்பு வழிபாடு செய்தார்.

இதன் பிறகு கோவில் வளாகத்தில் இருக்கும் ஆனந்த விலாச மண்டபத்தில் சத்ருசம்ஹார யாகம் நடத்தினார். இதன்பின் கோவில் மூலவருக்கு சாமி தரிசனம் செய்தார். அவருடன் பாஜக மாவட்ட தலைவர், பொதுச்செயலாளர், முன்னாள் மாவட்ட தலைவர் என பலர் உடன் இருந்தார்கள்.