துருக்கியில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக அடுக்குமாடி குடியிருப்புகளும், வணிக வளாகங்களும் இடிந்து தரைமட்டமாகியது. அதேபோல் சிரியாவிலும் நிலநடுக்க பாதிப்புகள் கடுமையாக இருந்தது. இடிபாடுகளில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து இருப்பதாக கூறப்படுகிறது. 2 நாடுகளுமே நிலநடுக்கத்தால் உருக்குலைந்து போயுள்ளன. இதனால் உலக நாடுகள் நிவாரண பொருட்களை அனுப்பி உதவி வருகிறது.

இந்நிலையில் துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து கவிஞர் வைரமுத்து தன் டுவிட்டர் பக்கத்தில் “துருக்கியின் கீழே பூமி புரண்டு படுத்துவிட்டது. ரிக்டர் கருவிகள் வெடித்துவிட்டது. வான்தொட்ட கட்டிடங்கள் தரைதட்டிவிட்டன. மனித உடல்கள் மீது வீடுகள் குடியேறிவிட்டது. மாண்டவன் மானுடன், உயிர் பிழைத்தவன் உறவினன். உலகநாடுகளானது ஓடி வரட்டும், கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.