ஓசூரில் குடியரசு தின விழாவையொட்டி ஸ்ரீ அகத்தியர் வீர சிலம்ப பள்ளியின் சார்பாக சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 5 வயதுக்கும் அதிகமான 100 பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு தொடர்ந்து 2 மணி நேரம் சிலம்பம் சுற்றினர்.

அதோடு தற்காற்பு கலைகளையும் செய்து அசத்தினர். இதை குளோபல் வேர்ல்ட் ரெக்கார்டு அமைப்ப்பின் அதிகாரப்பூர்வமான பிரதிநிதிகள் உதய் மற்றும் ராஜேஷ்குமார் ஆசிய இருவரும் நடுவராக இருந்து மேற்பார்வை செய்தனர். இவ்வாறு 2 மணிநேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி உலக சாதனை நிகழ்த்திய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் மெடல்கள் வழங்கப்பட்டது.