தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி -ராதிகா இணை ஆந்திரபிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் இணைக்கு சென்ற 19 ஆம் தேதி மும்பையில் மிக பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடந்தது.

இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கும்  நிலையில், திருப்பதி மலைக்கு வந்த அவர்கள் இன்று அதிகாலை ஏழுமலையான் கோவிலுக்கு சென்று திருப்பாவாடை சேவையில் பங்கேற்று வழிபாடு நடத்தினர். தேவஸ்தானம் சார்பாக அவர்களுக்கு தீர்த்த பிரசாதங்கள், வேத ஆசி போன்றவை வழங்கப்பட்டது.