மரபு மீறல், அரசியலமைப்பு சட்ட மீறல் என அனைத்து விதி மீறல்களிலும் தெலுங்கானா அரசானது ஈடுபட்டு வருகிறது என ஆளுநர் தமிழிசை குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் நிரூபர்களிடம் பேசியதாவது “குடியரசு தின விழாவை சிறப்பாக நடத்திய புதுச்சேரி அரசை பாராட்டுகிறேன். தெலுங்கானா முதலமைச்சர் என்னை புறக்கணிப்பது புதிதல்ல.

என்னால் தேசிய கொடிக்கு என்ன மரியாதை செய்ய முடியுமோ, அதனை செய்துவிட்டு சிறப்பாக செயல்பட்ட 6 பேருக்கு விருது வழங்கினேன். கவர்னர் மாளிகையில் குடியரசு தின விழா நடத்தியதற்கான காரணத்தை தெலுங்கானா முதல்வரிடம் தான் கேட்கவேண்டும். மரபுமீறல், அரசியலமைப்பு சட்டமீறல் என அனைத்து மீறல்களிலும் தெலுங்கானா அரசு ஈடுபட்டு இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு தகவல் அனுப்பி இருக்கிறேன்” என்று ஆளுநர் தமிழிசை கூறினார்.