ஐபிஎல் 2023 போட்டிகள் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் எந்த அணி ஜெயிக்கும் என்பது குறித்து தற்போது சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது ஐபிஎல் தொடரில் மும்பை அணிதான் கண்டிப்பாக ஜெயிக்கும் என கவாஸ்கர் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, இந்த முறை மும்பை அணி நிச்சயம் சாம்பியன் பட்டத்தை வெல்லும்.

அந்த அணியில் ஆர்ச்சர் வரவுள்ளார். அது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். அதுமட்டுமின்றி மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா இருக்கிறார். அவர் சிறப்பாக செயல்படக்கூடிய வீரர். இந்த வருடம் ஐபிஎல் தொடரில் நிச்சயம் ஏதேனும் ஒரு புதிய திட்டத்துடன் ரோகித் சர்மா களம் இறங்குவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.