ஐபிஎல் 2023 இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கிறது. ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் இருந்தார். ஆனால் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஏற்பட்ட கார் விபத்தில் ரிஷப் பண்ட் சிக்கியதால் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் டெல்லி அணிக்கு தற்போது புதிய கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி டெல்லி அணியின் கேப்டனாக வார்னர் நியமிக்கப்பட்டுள்ளதாக டெல்லி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன் பிறகு இந்திய அணியின் ஆல் ரவுண்டர் அக்சர் படேல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் டேவிட் வார்னர் மற்றும் அக்சர் படேல் தலைமையில் இந்த ஐபிஎல் 2023 சத்தமாக கர்ஜிக்க உள்ளதாக டெல்லி கேப்பிடல்ஸ் டுவிட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/DelhiCapitals/status/1636227038435590145?t=XvTXfZCrnTk1R_WQmZPvlA&s=19