தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் செல்லும் வழியில் வடூவூர் என்ற பகுதியில் ரூ. 7 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட உள் விளையாட்டு அரங்கத்தை திறந்துவைத்தார். அதன் பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 1964-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவுக்கே பெருமை சேர்த்த ராஜசேகரனுக்கு சிலை வைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியின் போது மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கப்படாததை கண்டித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒற்றை செங்களுடன் தமிழக முழுவதும் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில், அதே செங்கலை எம்எல்ஏ டிஆர்பி ராஜா சிலையாக வடித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நினைவு பரிசாக வழங்கினார்.