ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் போட்டியை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது. அதன் பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக தற்போது ரோகித் சர்மா இருக்கிறார்.

இந்நிலையில் ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்று கேள்வி எழுப்பியுள்ள சுனில் கவாஸ்கர், இந்த விவாதத்தில் நான் ஹர்திக் பாண்டியாவுக்கு வாக்களிப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, அணி வீரர்களுடன் வசதியாக விளையாடும் வீரர் ஹர்திக் பாண்டியா. வீரர்களை அவர் சிறப்பாக கையாள்கிறார். ஒவ்வொரு வீரரிடமும் பேசி அவர்களை வசதியாக வைத்துக் கொள்கிறார். ஆட்டத்தை மாற்றக் கூடியவர் ஹர்திக் பாண்டியா என்று கூறியுள்ளார்.