தொண்டர்கள் மத்தியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் ஏதோ ஒரு தலை மறைவு இயக்கத்தோடு எப்படி தொடர்பு வைத்துக்கொள்ள முடியும் ? அப்படி தொடர்பு வைத்துக்கொண்டு எப்படி அவர்கள் 100 விழுக்காடு முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக மாறிவிட முடியும் ? இது எவ்வளவு பெரிய கற்பனை. முஸ்லிம்களாவது ஓரளவுக்கு அரசியல் ஈடுபாடு உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்களாக இருக்கிறார்கள்.  கிறிஸ்தவர்கள் பைபிள் உண்டு,  ஜெபம் உண்டு என்று கிடைக்கிறார்கள். அவர்கள் அரசியல் பக்கமே அடி எடுத்து வைப்பதில்லை. இந்தியாவிலே முஸ்லிம்களுக்கு அரசியல் இயக்கம் இருப்பது போல கிறிஸ்துவர்களுக்கு அரசியல் இயக்கம் கிடையாது. தேசிய அளவிலும் அரசியல் இயக்கம் இல்லை, தமிழக அளவிலும் அரசியல் இயக்கம் இல்லை. அவர்கள் ஒரு நாளும் அரசியலை பேசியதில்லை.

ஒன்று இரண்டு பேர் இங்கே நம்முடைய லூர்துசாமி ஐயா அவர்களைப் போல அங்கி போட்டவர்கள் வந்தார்கள் என்றால்  ?மிகவும் பணிவாகவும், மிகவும் நல்லிணக்கமாகவும், மிகவும்  அன்பாகவும்  அங்கே தேவாலயங்களில் போதனை செய்வதைப்போல போதனை செய்துவிட்டு விடை பெற்று விடுவார்கள். அரசியல் பேசமாட்டார்கள் அப்படிப்பட்ட கிருத்துவர்களால் எப்படி பெரும்பான்மை இந்துக்களுக்கு ஆபத்து வரும் ?

சீக்கியர்கள் எத்தனை லட்சம் பேர்… பௌத்தர்கள் எத்தனை லட்சம் பேர்… பார்சிகள் எத்தனை லட்சம் பேர்…. சமணர்கள் எத்தனை லட்சம் பேர்…. அவர்கள் பதுங்கி பயந்து இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே தவிர. அவர்கள் யாரும் இந்துக்களுக்கு எதிரான வெறுப்பை விதைக்க முடியாது… வன்முறைகளில் ஈடுபட முடியாது. ஆகவே ஒட்டுமொத்தத்தில் சிறுபான்மையினரால் பெரும்பான்மை இந்துக்களுக்கு ஆபத்து என்று சொல்லுவதை அப்பட்டமான… அயோக்கியத்தனமான… வெறுப்பு அரசியல், அப்பட்டமான அவதூறு என பாஜக – ஆர்.எஸ்.எஸ் அரசியலை விமர்சனம் செய்து பேசினார்.