தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் சுமார் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் மகளிருக்கான ஆயிரம் ரூபாய் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதா அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்று செப்டம்பர் 15ஆம் தேதி குறுஞ்செய்தி அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் வைத்திருப்போர், 3600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோர், 2.5 லட்சத்திற்கும் மேல் வருமானம் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகியோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.