மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து ரூபாய்.5 கோடி செலவில் தயாராகிய “திரிஷ்யம்” என்ற  மலையாள திரைப்படம் 2013ல் திரைக்கு வந்து ரூ.75 கோடி வசூலித்து இந்திய திரையுலகை திரும்பி பார்க்க வைத்தது. இப்படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க பாபநாசம் எனும் பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து திரிஷ்யம் படத்தின் 2ஆம் பாகமும் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

அதன்பின் இப்படத்தின் 3-ம் பாகத்தை எடுக்கும் முயற்சிகளில் படத்தின் டைரக்டர் ஜீத்து ஜோசப்பும், மோகன்லாலும் ஈடுபட்டுள்ளனர். கூடிய விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. திரிஷ்யம் 3ம் பாகத்தை தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் அங்குள்ள முன்னணி நடிகர் நடிகைகளை நடிக்க வைத்து தனித்தனியாக இன்றி ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் திரைக்கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இதன் வாயிலாக இன்னும் அதிக வசூல் பார்க்க முடியும் என கருதுகிறார்கள்.