பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பாயல் கோஷ். இவர் தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவரைப் பற்றி ஏதாவது ஒரு செய்திகள் அடிக்கடி வெளி வருவது வழக்கம். கடந்த 2020-ம் ஆண்டு நடிகை பாயல் கோஷ் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது ஒரு தற்கொலை கடிதத்தின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அதில் நான் திடீரென தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தாலோ அல்லது எனக்கு மாரடைப்பு ஏற்பட்டாலோ என்னுடைய மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் என்று யாரின் பெயரையும் குறிப்பிடாமல் கடிதத்தில் எழுதியுள்ளது. மேலும் இந்த கடிதத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு மனநலம் சரியில்லை விரைவில் மருத்துவரை சென்று சந்தியுங்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Payal Ghosh (@iampayalghosh)