தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடித்திருந்த வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி 300 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்திருந்தது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் அப்படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்திற்காக 110 கோடி ரூபாய் வரை சம்பளம்  வாங்கியதாக தகவல் வெளிவந்த நிலையில், தற்போது சம்பள விஷயத்தில் நடிகர் விஜயை விட தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் அதிக சம்பளம் பெறுவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நிலையில் தற்போது புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை டி சீரிஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இது நடிகர் அல்லு அர்ஜுனின் முதல் ஹிந்தி படமாகும்‌. இந்நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் அல்லு அர்ஜுன் 125 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இதனால் தற்போது விஜயை விட அதிக சம்பளம் பெறும் நடிகராக அல்லு அர்ஜுன் மாறியுள்ளார்.