தமிழ் சினிமாவில் பிரபலமான பாடலாசிரியராக இருப்பவர் சினேகன். இவர் சினேகன் என்று அறக்கட்டளையை நடத்தி வருகிறார். அதன் பிறகு திரைப்பட நடிகையான ஜெயலட்சுமி சினேகம் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார். இந்நிலையில் பாடலாசிரியர் சினேகன் நடிகை ஜெயலட்சுமி தன்னுடைய அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி பலரிடம் பண மோசடி செய்துள்ளதாக போலீசில் புகார் கொடுத்தார்.

ஆனால் தான் அப்படி  எதுவும் செய்யவில்லை தன்மீது கொடுத்த புகாரை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி நடிகை ஜெயலட்சுமி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தபோது நடிகை ஜெயலட்சுமி மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளது. எனவே நடிகை ஜெயலட்சுமி மீது பதியப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற மனுவை ரத்து செய்ய வேண்டும் என அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். மேலும் இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு நடிகை ஜெயலட்சுமி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.