கோலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி டைரக்டராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவருடைய இயக்கத்தில் சமீபத்தில் விடுதலை படம் வெளியாகியது. சூரி கதாநாயகனாக நடித்த இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்போது தெலுங்கிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெறும் இப்படத்தின் 2-ஆம் பாகம் விரைவில் திரைக்கு வர தயாராகி வருகிறது.

இதனிடையே பேட்டி ஒன்றில் இயக்குனர் வெற்றிமாறன் கூறியதாவது “நம் அடையாளங்கள், தனித்துவங்கள், பெருமைகளை கொண்ட மண் சார்ந்த கதைகளை எடுப்பதால் தான் தென்னிந்திய படங்களுக்கு உலகமெங்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. எனினும் இதை உலகம் முழுவதும் செய்யாமல் உள்ள பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் அடிப்படையில் மட்டுமே படங்களை எடுப்பதால் தான் பிற மொழி திரைத்துறையினரால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என படங்களின் வெற்றிக்கான காரணம் கூறி உள்ளார்.