கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் ஏணிக்காரன் தோட்டத்தில் மீனவரான செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு துர்கா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் செல்வக்குமார் மீன்பிடிக்க சென்ற பிறகு துர்கா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை வீட்டிற்கு திரும்பி வந்த செல்வகுமார் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 50 பவுன் தாங்க நகைகள், 20 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செல்வகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.