கடலூர் மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ஏரி பாசன வாய்க்காலில் தொப்புள் கொடியுடன் பெண் குழந்தை சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தொப்புள் கொடியுடன் கிடந்த பெண் குழந்தையின் உடலை கைப்பற்றி திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பிறந்த சில மணி நேரமே ஆன குழந்தையை வாய்க்காலில் வீசி சென்றது யார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.