
உத்திரபிரதேச மாநிலத்தில் இம்ரான் – ஷிபா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் ஷிபாவிற்கு ஃபர்மான் என்பவருடன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் தகாத உறவில் இருந்து வந்தனர். இது இம்ரானுக்கு தெரிய வந்த நிலையில் தனது மனைவி ஷீபாவை கண்டித்துள்ளார். ஆனால் ஷிபா ஃபர்மானை சந்திப்பதை நிறுத்தவில்லை.
இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஷிபா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய முடிவு செய்த நிலையில் ரபீக் குரேஷி என்பவருடன் இம்ரானை கழுத்தை அறுத்து கொலை செய்து கிராமத்தின் அருகே உள்ள வாய்க்காலில் வீசிவிட்டு சென்று விட்டனர்.
இதைத்தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை வாய்க்காலின் அருகே ரத்த கறைகள் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது வாய்க்காலில் இருந்து தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உடலை மீட்டனர். பின்னர் சம்பவ இடத்தில் இருந்த செல்போன் மற்றும் ஆவணங்களை வைத்து அந்த உடல் இம்ரானின் உடல் என்று தெரியவந்த நிலையில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அப்போது இம்ரானின் மனைவி ஷீபா மற்றும் கள்ளக்காதலன் ஃபார்மான் ஆகியோரை கைது செய்தனர். காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் இம்ரானை கழுத்தை அறுத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். மேலும் மனைவி, கள்ளக்காதலனுடன் கணவனை கொன்று வாய்க்காலில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.