கர்நாடக மாநிலத்தில் இன்று சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ் மற்றும் மத சார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்றும் பிரதானமான கட்சிகளாக இருக்கிறது. மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக முனைப்புடன் செயல்பட்ட நிலையில் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசி காங்கிரஸ் கட்சியும் எப்படியாவது கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறது.

நேற்று நடைபெற்ற கருத்துக்கணிப்பின் முடிவில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரியவந்தது. இந்நிலையில் முதல்வர் பசுவராஜ் பொம்மை நேற்று கொடுத்த ஒரு பேட்டியின் போது கண்டிப்பாக கர்நாடகாவில் பாஜக கட்சி வெற்றி பெறும் என உறுதியாக கூறியுள்ளார். அவர் காங்கிரஸ் கட்சியில் எதுவும் சரியாக இல்லை. ஆனால் பாஜகவில் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்று கூறினார். மேலும் மக்களிடம் எங்களுக்கு ஆதரவு இருப்பதால் கண்டிப்பாக பாஜக வெற்றி பெறும் என்றும்  நம்பிக்கை தெரிவித்தார்.