பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா பகுதியில் பயங்கர கேஸ் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் 8 மாத ஆண் குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.

இந்த குழந்தையின் பெற்றோருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த தன்னுடைய தாய் (31) , தந்தை (35), தாத்தா (60) ஆகிய மூன்று பேருக்கும் 8 மாத ஆண் குழந்தை கொல்லி வைத்துள்ளது. மேலும் விவரம் அறியா வயதில் தன்னுடைய ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் 8 மாத ஆண் குழந்தை கொல்லி வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.