தமிழகத்தில் இன்று மற்றும் நாளை வெப்பநிலை அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-ல் இருந்து 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கும்.

சென்னையில் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் ஆகவும் அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று முதல் 9-ம் தேதி வரை தமிழகம்ஃ புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.