செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், என்னை பொறுத்த வரைக்கும் 50 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் மழைநீரில் நிறைய தண்ணி வருது. எல்லாமே கடலுக்கு தான் விட்றோமே தவிர செகண்டரி ஸ்டோரேஜ் பெரிதாக இல்லை.

வரும் காலகட்டத்தில் ஆவது அரசாங்கம் அதற்கு முன்னுரிமை கொடுத்து செகண்டரி ஸ்டோரேஜ் சிஸ்டம் அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.சிறுபான்மை மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல,

இந்தியாவிலே  இருக்கின்ற சிறுபான்மை மக்கள் ரொம்ப தெளிவாக காங்கிரஸ் கட்சி எந்த பக்கம் இருக்கிறதோ, அந்த பக்கம் நின்றால் தான் அவர்களுக்கு நம்பிக்கை வரும். காங்கிரஸ் கட்சி தான் சிறுபான்மை மக்களுக்கு நம்பிக்கை ஊட்டி இருக்கிறது.

சிறுபான்மை மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் கட்சியாக இருக்கும் ஒரே கட்சி இந்தியாவிலேயே காங்கிரஸ் கட்சி தான். காங்கிரஸ் கட்சி எந்த கூட்டணியில் இருக்கிறதோ, அந்த கூட்டணியை தான் சிறுபான்மை மக்கள் முழுமையாக நம்புவார்கள் என தெரிவித்தார்.