தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அந்தந்த தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. புயல் எதிரொலியாக கடந்த நான்கு நாட்களாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அடுத்த வாரம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகள் திறக்கும் முன்பு வளாகத்தை ஆய்வு செய்து உடைந்த பொருட்கள் மற்றும் கட்டிட இடைபாடுகளை அகற்றி தூய்மைப்படுத்துமாறு பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. வகுப்பறை பாதிக்கப்பட்டிருந்தால் அவற்றை பூட்டி மாணவர்கள் செல்லாதவாறு வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.