தமிழகத்தில் புயல் எதிரொளியாக பல மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் சென்னை இதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்து நிற்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை இன்று மாலைக்குள் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் வடிய 8 நாட்கள் தேவைப்பட்டது. தற்போது அரசு எடுத்த நடவடிக்கையால் இரண்டு நாட்களில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் குறைந்துள்ளது. பள்ளமான பகுதிகளில் முற்றிலும் தண்ணீர் வடிந்துள்ள நிலையில் மேடான பகுதிகளிலும் இன்றுக்குள் தண்ணீர் வடிந்து சென்னை இயல்பு நிலைக்கு திரும்பும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.