அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளதாக ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார். இது தொடர்பாக எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்பி உதயகுமார் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமியிக்கு பொதுமக்கள் மத்தியில் 50 சதவீதம் செல்வாக்கு இருந்தது.

ஆனால் மதுரை விமான நிலைய விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் மீது  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு மக்கள் மத்தியில் 70% செல்வாக்கு அதிகரித்துள்ளது. இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிக்கவில்லை என்றால் மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிச்சாமியின் செல்வாக்கு 100 சதவீதமாக அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.