அ.தி.மு.க-வில் இரட்டை தலைமை பிரச்சனை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கு பின் பல கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பாஜக மற்றும் அமமுக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் எம்எல்ஏவும், அமமுக அமைப்பு செயலாளருமான கேகே சிவசாமி இன்று இபிஎஸ்ஐ நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். இப்படி டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் பக்கம் வருவதால் EPS ஆதரவாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் விரைவில் பொதுச் செயலாளர் தேர்தலை வைத்து EPS-ஐ அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆக்க வேலைப்பாடுகள் நடந்து வருகிறது.