பிரபல நடிகை சமந்தாவும் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். சமந்தாவுடனான விவாகரத்து குறித்த அண்மையில் நடிகர் நாக சைதன்யா ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில் நடிகை சமந்தா மிகவும் நல்ல பெண். அவருடன் வாழ்ந்த நாட்களை நான் மதிக்கிறேன்.

அவர் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என கூறினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் நடிகை சமந்தா தன்னுடைய வலைதள பக்கத்தில், நாம் எல்லோரும் ஒன்று தான். கேவலம், அகங்காரம் மற்றும் பயம் தான் நம்மை தூரமாக்கி விட்டது என்று பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஈகோ பிரச்சனையால் தான் சமந்தா மற்றும் நாகசைதன்யா பிரிந்து விட்டதாக கூறி வருகிறார்கள். மேலும் இருவரும் ஈகோவை மறந்து மீண்டும் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் எனவும் ரசிகர்கள் அட்வைஸ் கூறி வருகிறார்கள்.