தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் பிந்து மாதவி. இவர் தமிழில் கழுகு மற்றும் ஜாக்சன் துரை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வரும் பிந்து மாதவி தற்போது நியூசென்ஸ் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது தொகுப்பாளர் நீங்கள் த்ரிஷாவின் முன்னாள் காதலர் வருண் மணியனுடன் டேட்டிங் சென்றீர்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு நடிகை பிந்து மாதவி ஆமாம் என்று பதிலளித்தார். ஆனால் அது வெவ்வேறு காலத்தில் நடந்தது என்றார். அதன் பிறகு திரிஷா பிறந்த பிறகு நீங்கள் டேட்டிங் செய்தீர்களா என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஆமாம் என்று பிந்து மாதவி பதிலளித்தார். நடிகை திரிஷா தொழிலதிபர் வருண் மணியனை காதலித்து வந்த நிலையில் அவர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் திருமணம் நடைபெறுவதற்கு முன்பாகவே இருவரும் பிரிந்து விட்டனர். அப்போது பிந்து மாதவி மற்றும் வருண் மணியன் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகிறது. அப்போது நடந்த சம்பவம் குறித்து தான் இப்போது தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். வருண் மணியனுடன் டேட்டிங் சென்றதை பிந்து மாதவியும் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் இது திரிஷாவின் ரசிகர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் திரிஷா மற்றும் வருண்மணியன் பிரிவுக்கு இதுதான் காரணமா என்று கேட்டு வருகிறார்கள்.