சமீபத்தில் மலேசியாவில் நடிகர் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் – -2  படப்பிடிப்பின்போது விபத்தில் சிக்கி காயமடைந்தார். உடனடியாக படக்குழுவினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் அபாய கட்டத்திலிருந்து மீட்டனர். தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது நலமுடன் இருக்கிறார்.

இந்நிலையில் படத்தின்போது ஏற்பட்ட விபத்து குறித்து மனம் திறந்துள்ளார் விஜய் ஆண்டனி. படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், விபத்தில் முகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. தாடையில் ஏற்பட்ட காயத்தால் 9 பிளேட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. சிகிச்சையின்போது ஒன்றரை மாதத்திற்கு திரவ உணவையே எடுத்துக்கொண்டேன். சில வார்த்தைகளை தெளிவாக கூட பேச முடியவில்லை என்று பேசியுள்ளார்.