டைரக்டர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் இப்போது “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகக்கூடிய இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள்மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ் குமார் போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் சூட்டிங் தென்காசி பகுதியில் 3 மாதங்களாக நடந்து வருகிறது.

அதன்படி மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் குண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டபோது, அதன் சத்தம் கேட்டதால் சுற்று வட்டார பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து அங்கு சென்ற மாவட்ட ஆட்சியர் இதுபற்றி விசாரணை மேற்கொண்டார். அதன்பின் படக்குழு உரிய அனுமதி பெறவில்லை என சூட்டிங் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கேப்டன் மில்லர் படக்குழு முறையான அனுமதி பெற்று மாவட்ட ஆட்சியரிடம் சான்றிதழை சமர்ப்பித்ததை அடுத்து சூட்டிங் நடந்து வருகிறது.

இந்த நிலையில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கேப்டன் மில்லர் சூட்டிங் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் கூறியிருப்பதாவது, நீர் நிலைகளில் சூட்டிங் நடத்த வேண்டிய தேவை என்ன..? யார் இந்த அனுமதியை கொடுத்தார்கள் என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு அதில் தவறு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.