தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குனராக திகழ்ந்தவர் தான் நடிகர் மனோபாலா.இவர் பெரும்பாலான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து லட்சக்கணக்கான ரசிகர்களை கொள்ளை கொண்டவர். இவர் கடந்த சில நாட்களாக கல்லீரல் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வாரம் வீட்டில் சிகிச்சையில் இருந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் கணவர் இறந்த ஒரே வாரத்தில் மனோபாலாவின் மனைவி உஷா செய்துள்ள செயல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. பொதுவாக மனோபாலாவின் குடும்ப வழக்கப்படி ஒருவர் இறந்துவிட்டால் அவர்களின் உடைகள் மற்றும் உடமைகளை தீயிட்டு கொளுத்துவது வழக்கம். ஆனால் அப்படி செய்வதை விரும்பாத உஷா தன்னுடைய கணவரின் உடமைகளை அனைத்தையும் அனாதை ஆசிரமத்திற்கு கொடுத்துள்ளார். மேலும் தனது கணவரின் நினைவாக ஒரே ஒரு வார்த்தை மட்டுமே அவர் தன்னிடம் வைத்துள்ளார். இவரின் இந்த செயல் பலரையும் நெகிழ வைத்துள்ளது.