செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு, 66 ஆவது காமன் வெல்த் மாநாடு ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள கானாவின் தலைநகர் அட்டானாவில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு தந்த நம்முடைய மாண்புமிகு முதல்வருக்கு நன்றியை தெரிவித்து,  அந்தக் கூட்டத்தில் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது பெருமையாக கருதுகிறேன்.

காமன்வெல்த் மாநாடு என்பது சட்டமன்றம், நாடாளுமன்றத்தின் மூலம் மக்களுக்கு சோசியல் ஜஸ்டிஸ், ஜனநாயகம் தழைக்க  வேண்டும்.  எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால்?  திராவிட மாடல் ஆட்சி தான் காமென்வெல்த்   மாநாட்டினுடைய மையக்கரு பொருள் என தெரிவித்தார்.