காசாவிலிருந்து பாலஸ்தீனர்கள் பாதுகாப்பாக வெளியே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசாவில் இருந்து வெளியேறுவதற்கான பாதை 3 மணி நேரத்திற்கு வெகு விரைவில் திறக்கப்படும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்தியுள்ளதை முன்னிட்டு பாலஸ்தீனர்கள் வெளியேறி வரும் நிலையில் அறிவித்துள்ளது.

வடக்கு காசா பகுதியை விட்டு தெற்கு காசா பகுதிக்கு செல்லுமாறு ஏற்கனவே இஸ்ரேல் தெரிவித்துள்ளது. வடக்கு காசா பகுதியில் இருந்து மக்கள் வெளியேற மூணு மணி நேரம் தாக்குதல் நிறுத்தப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.  குறிப்பிட்ட வழித்தடத்தில் மூன்று மணி நேரம் தாக்குதல் நிறுத்தப்படும் என இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது

காசாவிலிருந்து ஒரு லட்சம் பேர் கூட வெளியேறவில்லை:

காசாவின் வடக்கு பகுதியில் இருந்து வெளியேற இஸ்ரேல் 24 மணி நேரம் கெடு விதித்தும் பெருமளவில் மக்கள் வெளியேறவில்லை. காசாவின் வடக்கில் உள்ள 11 லட்சம் பேர் வெளியேற கெடு விதித்து ஒரு லட்சம் பேர் கூட வெளியேறவில்லை என தகவல்.காசா பகுதியில் இருந்து6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை அகதிகளாக இடநகர்வு  செய்துள்ளதாக ஐநா தகவல் தெரிவித்துள்ளது. காசாவிலிருந்து பாலஸ்தீன மக்களை ஹமாஸ் அமைப்பினர் வெளியேறவிடாமல் தடுத்து வருவதாக இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது.