கொல்கத்தாவில் உள்ள தில்ஜாலா பகுதியில் அலோக் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குழந்தை இல்லாததால் மந்திரவாதி ஒருவரிடம் சென்றுள்ளார். அவர் ஒரு குழந்தையை நரபலி கொடுத்தால் உனக்கு குழந்தை பிறக்கும் என்று கூறியுள்ளார். இதனால் அலோக்குமார் தன் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 7 வயது சிறுமியை யாருக்கும் தெரியாமல் கடத்திச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

அதன்பிறகு சிறுமியின் உடலை ஒரு சாக்கு பையில் வைத்து வெளியே வீசியுள்ளார். இது குறித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாக்கு பையில் இருந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அலோக்குமாரை கைது செய்துள்ளனர். மேலும் சிறுமியின் தலையில் பலமான காயம் இருப்பதோடு பிறப்புறுப்பில் நகக்கீரல்களும் இருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.