தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக ரிலீஸ் ஆன படம் “துணிவு”. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மலையாள நடிகையான மஞ்சு வாரியர் நடித்து இருந்தார். இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையும் குவித்தது. நடிகர் அஜித் துணிவு படத்தின் சூட்டிங் சமயத்தில் மஞ்சு வாரியரிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதாவது, 13 வருடங்களுக்கு முன் வெளியான “அசல்” படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த பாவனாவிடம் பேசவேண்டும் என அஜித் கேட்டுள்ளார். உடனடியாக மஞ்சு வாரியர் பாவனாவுக்கு கால் செய்திருக்கிறார். எனினும் அவருக்கு கால் ரீச்சாகவில்லை.

பின் இதுகுறித்து அறிந்த பாவனா சில நாட்களுக்கு பின் சென்னை வந்து துணிவு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அஜித் மற்றும் மஞ்சு வாரியரை சந்தித்து உள்ளார். அதன்பின் அவர்களுடன் இணைந்து மதிய உணவை சாப்பிட்டார் பாவனா. இந்த சந்திப்பை அஜித் பிறந்தநாள் அன்று தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “என் வாழ்வில் மறக்க முடியாத நாள்” என பதிவிட்டிருந்தார். அதனை தொடர்ந்து நடிகை பாவனா பேட்டி ஒன்றில் கூறியதாவது “அவருடன் எப்பவோ நடித்த நடிகை நான். எனினும் அவர் இன்னும் என்னை நியாபகம் வைத்து நலம் விசாரித்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த பண்பால்தான் அனைவரும் அஜித்தை கொண்டாடுகின்றனர்” என அவர் கூறினார்.