தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் பிஸியாக இருந்தாலும் மறுபக்கம் விஜய் மக்கள் இயக்கம் மூலமாக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அதனால் விரைவில் விஜய் அரசியலுக்கு வர உள்ளதாக அடிக்கடி செய்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் நடிகர் விஜய் தன்னுடைய மக்கள் இயக்க நிர்வாகியை சரவணனுக்கு கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.விஜயின் பிறந்தநாள் அன்று சரவணன் செய்த நலத்திட்ட உதவிகளுக்காக அவருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதன் முடிவில் பிரியமுடன் விஜய் என்று குறிப்பிடப்பட்டு இருப்பதை விஜய் ரசிகர்கள் இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள். இந்த கடிதத்தை சரவணன் அவருடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த கடிதம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.