தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித்குமார் பைக் வாயிலாக இந்தியாவை சுற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதில் முதற்கட்டமாக இமயமலையில் கடந்த வருடம் சுற்றுப் பயணத்தை தொடங்கினார். பனிப் படர்ந்த பகுதிகளில் அஜித் பைக்கில் தன் நண்பர்கள் உடன் பயணம் மேற்கொண்ட வீடியோ காட்சிகளானது இணையத்தில் வைரலாக பரவியது.

இப்போது அஜித்தின் 62-வது படம் தொடக்க வேலையில் உள்ளதால் 2-ம் கட்ட பைக் பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார் அஜித். நேபாளத்தையொட்டி உள்ள பகுதியில் இப்பயணத்தை தொடர்ந்து வருகிறார். சாலை மார்க்கமாக அஜித் போகும்போது அவரை அடையாளம் கண்டு காரில் வந்த சிலர் பின் தொடர்ந்து சென்றனர்.

இந்நிலையில் தன்னைப் பின் தொடர்ந்து வருவதை பார்த்த அஜித்தும் தன் பைக்கை நிறுத்திவிட்டு அவர்களிடம் விசாரித்தார். புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் எனும் ஆசையை அவர்கள் அஜித்திடம் தெரிவித்தனர். உடனே தயங்காமல் அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார் அஜித். இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது.